29-10-2022
தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்கள் நினைவு போற்றும் இலக்கிய கருத்தரங்கம் திண்டுக்கல் எம்.வி.முத்தையா அரசு மகளிர் கலைக் கல்லூரியில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சா.விசாகன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் பெ.இளங்கோ அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.
கல்லூரி முதல்வர் தே.இலட்சுமி,
தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் நாகநந்தினி தமிழறிஞர் தமிழ்ப்பெரியசாமி, பேரா.முனைவர் மனோகரன், தமிழாசிரியர் குயிலன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இலக்கியக் கருத்தரங்கில் வீரமுரசு சுப்பிரமனிய சிவா குறித்து சா.சுஜாதா (ஜி.டி.என் கல்லூரி தமிழ்த்துறை தலைவர்)
மாயூரம் வேதநாயகம் பிள்ளை குறித்து தமிழறிஞர் துரை தில்லான், ஐராவதம் மகாதேவன் குறித்து வீ.குழந்தைராஜ் (மாவட்டத் தலைவர் தமிழகத் தமிழாசிரியர் கழகம்) நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை குறித்து முனைவர் பெ.சந்திரா (மேனாள் உலகத் தமிழ்ச்சங்க இயக்குநர்) கருத்துரை வழங்கினர். நிகழ்வில் தேனி வையைத் தமிழ்ச்சங்கம் சார்பில் கலந்துகொண்டு நெறிப்படுத்திய இனிய பொழுது. தமிழ்வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் இளங்கோ ஐயா அவர்களுக்கு நன்றி.
நிறைவாக அண்ணல் காந்தியடிகள் பிறந்தநாள் பேச்சுப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவ மாணவியர்களுக்கும், தமிழறிஞர் நினைவுபோற்றும் இலக்கியக் கருத்தரங்கம் தொடர்பிலான பேச்சுப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவ மாணவியர்களுக்கும் இன்று 29.10.2022 நடைபெற்ற கருத்தங்கக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பரிசுகள் பாராட்டுச்சான்றிதழ் வழங்கிச் சிறப்பித்தார். நன்றியுரை புலவர் ச.ந.இளங்குமரன்.
இனிய அன்புடன்