வின்முகட்டில் பவனிவரும் வெண்ணிலா இந்த
விளியழகி முகவோளிமுன் நாணி நிற்கும்
பொன்தகடு வேய்ந்திட்ட சிற்பம் கூட
பூவை இவள் கட்டழகைத் தொட்டுப் பார்க்கும்.
வெண்முத்து முல்லைப்பூ தென்னம் பாளை
வெடிப்பு இவள் புன்னகைக்கு ஈடே ஆகா.
தேன்சிந்தும் சொல்லழகி சிவந்த இதழின்
தெவிட்டாத முத்தத்தில் நனைவோம் என்று
நான்எண்ணி வந்திட்டேன் .ஆனால்?இந்த
நங்கை என் நாயகியாய் வந்திடச் சமூகம்
வான் உயர வரதட்சணை தடையைப் போட்டு
வாங்குதையா பெண்களுடை உயிரை, கற்பை
ஏன் இழந்தாய் எனக்கேட்க வேண்டிய கணவன்
எண்ணுகின்றான் பொன்போருளை மானம் விட்டு.
அணிகலனாய் ஆடம்பரப் பொருட்கள் தன்னை
அறிவையிவள்அணியாமல் இயற்கை அழகு
பணிசெய்ய எழிலரசி யாக வாழும்
பாவையிவள் கட்டழகைத் தொட்டுப் பார்க்க
துணிவுற்று எழுந்திட்ட என்றன் கைகள்
துடிக்குதையா என்செய்வேன் இவளை , அந்த
வணிகக்கடைப் பொருளாக்கி விற்பர் ஆயின்
வாங்கும் நான் வரதட்சணை வாங்க மாட்டேன் .
விளியழகி முகவோளிமுன் நாணி நிற்கும்
பொன்தகடு வேய்ந்திட்ட சிற்பம் கூட
பூவை இவள் கட்டழகைத் தொட்டுப் பார்க்கும்.
வெண்முத்து முல்லைப்பூ தென்னம் பாளை
வெடிப்பு இவள் புன்னகைக்கு ஈடே ஆகா.
தேன்சிந்தும் சொல்லழகி சிவந்த இதழின்
தெவிட்டாத முத்தத்தில் நனைவோம் என்று
நான்எண்ணி வந்திட்டேன் .ஆனால்?இந்த
நங்கை என் நாயகியாய் வந்திடச் சமூகம்
வான் உயர வரதட்சணை தடையைப் போட்டு
வாங்குதையா பெண்களுடை உயிரை, கற்பை
ஏன் இழந்தாய் எனக்கேட்க வேண்டிய கணவன்
எண்ணுகின்றான் பொன்போருளை மானம் விட்டு.
அணிகலனாய் ஆடம்பரப் பொருட்கள் தன்னை
அறிவையிவள்அணியாமல் இயற்கை அழகு
பணிசெய்ய எழிலரசி யாக வாழும்
பாவையிவள் கட்டழகைத் தொட்டுப் பார்க்க
துணிவுற்று எழுந்திட்ட என்றன் கைகள்
துடிக்குதையா என்செய்வேன் இவளை , அந்த
வணிகக்கடைப் பொருளாக்கி விற்பர் ஆயின்
வாங்கும் நான் வரதட்சணை வாங்க மாட்டேன் .